'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி |
மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாக்கப்பட்டுள்ள மரைக்கார் ; அரபிக்கடளிண்டே சிம்ஹம் படம் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக தியேட்டர்களில் வெளியாவதற்காக காத்திருந்தது.. ஆனால் தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் அமேசான் பிரைமில் வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.
மரைக்கார் போன்ற பெரிய படம் இந்த சூழலில் தியேட்டர்களில் வெளியானால் தான் வழக்கம்போல ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி வர ஆரம்பிப்பார்கள்.. மற்ற படங்களும் தியேட்டர் ரிலீஸ் பக்கம் கவனத்தை செலுத்துவார்கள் என திரையரங்கு உரிமியாளர்கள் நம்பிக்கையாக காத்திருந்தனர். ஆனால் மரைக்கார் தயாரிப்பாளர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து கடுமையான ஆட்சேபம் எழுந்தது.
படத்தை ஒடிடியில் வெளியிடுவது தயாரிப்பாளரின் உரிமை என்றாலும், திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவராக ஆண்டனி பெரும்பாவூரே இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது தான் இந்த எதிர்ப்புக்கு காரணம். இந்த சலசலப்பை தொடர்ந்து, தான் வகித்து வந்த துணைத்தலைவர் பதவியை ராஜினமா செய்துள்ளார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர். இதன்மூலம் மரைக்கார் படம் ஒடிடியில் தான் ரிலீஸாக இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.