விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் |
மோகன்லால்-பிரியதர்ஷன் கூட்டணியில் பிரமாண்டமான வரலாற்று படமாக உருவாக்கப்பட்டுள்ள மரைக்கார் ; அரபிக்கடளிண்டே சிம்ஹம் படம் கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக தியேட்டர்களில் வெளியாவதற்காக காத்திருந்தது.. ஆனால் தற்போது கேரளாவில் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை தியேட்டரில் வெளியிடாமல் அமேசான் பிரைமில் வெளியிட ஏற்பாடுகளை செய்து வருகிறார் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர்.
மரைக்கார் போன்ற பெரிய படம் இந்த சூழலில் தியேட்டர்களில் வெளியானால் தான் வழக்கம்போல ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி வர ஆரம்பிப்பார்கள்.. மற்ற படங்களும் தியேட்டர் ரிலீஸ் பக்கம் கவனத்தை செலுத்துவார்கள் என திரையரங்கு உரிமியாளர்கள் நம்பிக்கையாக காத்திருந்தனர். ஆனால் மரைக்கார் தயாரிப்பாளர் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதால் இதற்கு தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து கடுமையான ஆட்சேபம் எழுந்தது.
படத்தை ஒடிடியில் வெளியிடுவது தயாரிப்பாளரின் உரிமை என்றாலும், திரைப்பட வெளியீட்டாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவராக ஆண்டனி பெரும்பாவூரே இப்படி ஒரு முயற்சியில் இறங்கியுள்ளது தான் இந்த எதிர்ப்புக்கு காரணம். இந்த சலசலப்பை தொடர்ந்து, தான் வகித்து வந்த துணைத்தலைவர் பதவியை ராஜினமா செய்துள்ளார் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர். இதன்மூலம் மரைக்கார் படம் ஒடிடியில் தான் ரிலீஸாக இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது.