ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் |
சின்னத்திரை நடிகையான சித்ரா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டு மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் உருவாக்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினியாக தொடங்கி நடிகையாக சின்னத்திரையில் பயணித்து கோடான கோடி மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர். ஒரு கட்டத்தில் முல்லை என்று சொன்னாலே சித்ராவின் முகம் தான் ஞாபகம் வரும். ரசிகர்கள் கூட சித்ராவை முல்லை என்றே அழைத்து வந்தனர். பழகுவதற்கு மிக இனிமையான குணம் கொண்ட அவர் சென்ற வருடம் எதிர்பாரத விதமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது ரசிகர்கள் ஒரு புகைப்படம் ஒன்றை டிசைன் செய்துள்ளனர். அந்த புகைப்படத்தில் சித்ராவின் மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கு 'மக்கள் நாயகி' என்ற பட்டம் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.