ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
சின்னத்திரை நடிகையான சித்ரா ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டு மண்ணுலகை விட்டு மறைந்துவிட்டார். இந்நிலையில் அவரது ரசிகர்கள் அவருக்கு மரியாதை செலுத்தும் வண்ணம் உருவாக்கிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தொகுப்பாளினியாக தொடங்கி நடிகையாக சின்னத்திரையில் பயணித்து கோடான கோடி மக்களின் மனங்களில் இடம் பிடித்தவர் நடிகை சித்ரா. விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர். ஒரு கட்டத்தில் முல்லை என்று சொன்னாலே சித்ராவின் முகம் தான் ஞாபகம் வரும். ரசிகர்கள் கூட சித்ராவை முல்லை என்றே அழைத்து வந்தனர். பழகுவதற்கு மிக இனிமையான குணம் கொண்ட அவர் சென்ற வருடம் எதிர்பாரத விதமாக மரணமடைந்தார்.
இந்நிலையில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவரது ரசிகர்கள் ஒரு புகைப்படம் ஒன்றை டிசைன் செய்துள்ளனர். அந்த புகைப்படத்தில் சித்ராவின் மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் வகையில் அவருக்கு 'மக்கள் நாயகி' என்ற பட்டம் கொடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.