பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

சின்னத்திரை நடிகையான ஜெயஸ்ரீயின் கணவர், தன் மனைவியின் உயிருக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு தான் காரணமில்லை என போலீஸில் புகார் அளித்துள்ளார்.
சின்னத்திரை நடிகரான ஈஸ்வர் மீது அவரது மனைவியும், நடிகையுமான ஜெயஸ்ரீ, கடந்த 2019 வருடம் ஈஸ்வர் தன்னை கொடுமைப்படுத்துவதாக அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து ஈஸ்வரும் ஜெயஸ்ரீயும் பிரிந்து தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜெயஸ்ரீயின் உயிருக்கு ஆபத்து, ஏதாவது நேர்ந்தால் அதற்கு தான் காரணமில்லை என காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார் ஈஸ்வர். புகார் அளித்த பின் அது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'ஜெயஸ்ரீ தற்போது எங்களது அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் மருத்துவர் ராகேஷ் என்பவருடன் ஒன்றாக வசித்து வருகிறார். இவர்களின் இந்த உறவு ராகேஷின் தந்தை சண்முகத்திற்கு பிடிக்கவில்லை.
தொழிலதிபர் மற்றும் சினிமா தயாரிப்பாளரான சண்முகம் ஜெயஸ்ரீ தனது மகனை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என என்னிடம் புலம்பினார். எனது விவாகாரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் அதுகுறித்து பேச முடியாது என்று கூறினேன். ஆத்திரமடைந்த அவர் ஜெயஸ்ரீ தனது மகனை விட்டு பிரிந்து செல்லவில்லை என்றால் அவள் மீது காரை ஏற்றி கொலை செய்துவிடுவேன் என்று கூறினார். இதனால் ஜெயஸ்ரீக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமுமில்லை என்று காவல் ஆணையரிடம் புகார் அளித்திருக்கிறேன்' என கூறியுள்ளார்.
மேலும், ஜெயஸ்ரீ பணம் பறிக்கும் நோக்கத்தில் பல பேரிடம் பழகி வருவதாகவும், பொய் காரணங்களை சொல்லி விவகாரத்து வழக்கில் ஆஜராகமால் எஸ்கேப் ஆகி வருவதாகவும் அந்த பேட்டியில் ஈஸ்வர் கூறினார்.