பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனரானவர் கார்த்திக் நரேன். முதல் படமான துருவங்கள் 16-லேயே கவனம் பெற்றார். கார்த்திக் நரேன் படத்தையும், மேக்கிங் ஸ்டைலையும் மணிரத்னம், கவுதம் வாசுதேவ மேனன் போன்றவர்கள் பாராட்டினர். கார்த்திக் நரேனின் அடுத்தப் படத்தை கவுதம் தயாரித்தார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, இந்திரஜித், சந்தீப் கிஷன் நடிப்பில் இரண்டாவது படம் நரகாசூரன் ஆரம்பமானது.
படம் முடிந்த பிறகு வெளியிடவும் முடியவில்லை. கார்த்திக் நரேன் அருண் விஜய், பிரசன்னாவை வைத்து மாபியா - சேப்டர் 1 படத்தை எடுத்தார். மணிரத்னம் தயாரித்த நவரசா ஆந்தாலஜியில் ஒரு கதையை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். இரண்டுமே போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகிறார். படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
இதையடுத்து கார்த்திக் நரேன் அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.