என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் நேரடியாக இயக்குனரானவர் கார்த்திக் நரேன். முதல் படமான துருவங்கள் 16-லேயே கவனம் பெற்றார். கார்த்திக் நரேன் படத்தையும், மேக்கிங் ஸ்டைலையும் மணிரத்னம், கவுதம் வாசுதேவ மேனன் போன்றவர்கள் பாராட்டினர். கார்த்திக் நரேனின் அடுத்தப் படத்தை கவுதம் தயாரித்தார். அரவிந்த்சாமி, ஸ்ரேயா, இந்திரஜித், சந்தீப் கிஷன் நடிப்பில் இரண்டாவது படம் நரகாசூரன் ஆரம்பமானது.
படம் முடிந்த பிறகு வெளியிடவும் முடியவில்லை. கார்த்திக் நரேன் அருண் விஜய், பிரசன்னாவை வைத்து மாபியா - சேப்டர் 1 படத்தை எடுத்தார். மணிரத்னம் தயாரித்த நவரசா ஆந்தாலஜியில் ஒரு கதையை கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். இரண்டுமே போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது தனுஷ் நடிப்பில் மாறன் படத்தை இயக்கி வருகிறார். படம் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது.
இதையடுத்து கார்த்திக் நரேன் அதர்வா நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதற்கான முதல்கட்டப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்துள்ளது.