பாடகி ஜானகியின் மகன் மறைவு : பேத்தி வெளியிட்ட அறிக்கை | புதிய படங்களுக்குப் போட்டியான 'மங்காத்தா' ரீரிலீஸ் | கான்ஸ்டபிள் கனகம் வெப் சீரிஸின் 3வது சீசன் திரைப்படமாக வெளியாகிறது | மீண்டும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்கும் பறந்து போ நடிகை | துரந்தர் முதல் நாள் கலெக்ஷனை ஓவர்டேக் செய்த ‛பார்டர் 2' | கல்கி 2 படம் குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட தகவல் | ஜனவரி 30ல் திரைக்கு வரும் வடிவுக்கரசியின் க்ராணி! | ஆமா, அந்த பாபு யாரு...? : ரவி மோகனினிடம் கேட்கப்படும் கேள்வி | மங்காத்தாவை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் | மெரினா பீச் பெயரை மாற்ற வேண்டுமாம் : காமெடி பண்ணும் புது ஹீரோ |

‛நந்தா' படம் மூலம் நடிகர் சூர்யாவுக்கு திருப்புமுனை தந்தவர் இயக்குனர் பாலா. அதன்பின் இருவரும் பிதாமகன் படத்திலும் இணைந்தனர். தொடர்ந்து பாலாவின் அவன் இவன் படத்தில் சிறப்பு வேடத்திலும் தோன்றினார். இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைகிறார்கள். இதுப்பற்றி செய்திகள் மட்டுமே வந்த நிலையில் இப்போது சூர்யா உறுதி செய்துள்ளார்.
இதுப்பற்றி டுவிட்டரில், ‛‛என்னைவிட என் மீது அதிக நம்பிக்கை வைத்தவர். ஒரு புதிய உலகை எனக்கு அறிமுகம் செய்து அடையாளம் தந்தவர். 20 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் அதே ஆர்வத்துடன் அவர் முன் நான், அப்பா ஆசீர்வதிக்க மீண்டும் ஓர் அழகிய பயணம் என் பாலா அண்ணனுடன்...
அனைவரின் அன்பும் ஆதரவும் தொடர வேண்டுகிறேன்'' என பதிவிட்டுள்ளார் சூர்யா.
அதேசமயம் இந்த படத்தை சூர்யா தயாரிக்கிறாரா இல்லை நடிக்கவும் செய்கிறாரா என்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. விரைவில் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.