நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுள்ளார். டில்லியில் நடந்த 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் ரஜினிக்கு துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு விருது வழங்கி கவுரவித்தார்.
‛‛இந்த விருதை தனது குருநாதர் கே.பாலசந்தர், சகோதரர் சத்யநாராயணன், நண்பர் ராஜ் பகதூர் மற்றும் திரைத்துரையை சார்ந்த அனைத்து கலைஞர்கள், ரசிகர்களுக்கும், தன்னை வாழ வைத்த தமிழ் நெஞ்சங்களுக்கும் சமர்ப்பிப்பதாக ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விருதை பெற்ற பிறகு டில்லியில் ஜனாதிபாதி ராம்நாத் கோவிந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார் ரஜினிகாந்த். இதுதொடர்பான புகைப்படங்களை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
![]() |
விருதுகளுடன் மாமனார் - மருமகன்
தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினி, தாதா சாகேப் பால்கே விருது பெற்றார். அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் பெற்றார். ஒரேநேரத்தில் ஒரே விழாவில் மாமனார் ரஜினியும், மருமகன் தனுஷூம் விருது பெற்றனர். இவர்கள் இருவரும் விருதுகளுடன் போஸ் கொடுத்த போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலாகின.