ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் | அஜித் 64 அறிவிப்புக்காக காத்திருக்கும் ரசிகர்கள் | 26வது பிறந்தநாளை தந்தையுடன் கொண்டாடிய திலீப் மகள் ; தாயுடன் பத்து வருடமாக பாராமுகம் | போலி 'ஏஐ' வீடியோக்கள் : 'துரந்தர்' இயக்குனர் ஆதித்ய தர் எச்சரிக்கை | இனி இந்த ஜானரில் படங்களை இயக்கப் போவதில்லை ; இயக்குனர் பிரியதர்ஷன் முடிவு |

நடிகர் ரஜினிகாந்தை பொறுத்தவரை தனது படப்பிடிப்புகளுக்கு செல்லும்போதும் சரி அல்லது வீட்டில் இருக்கும் போது முக்கியமான விசேஷ நாட்களிலும் சரி, தனது ரசிகர்களை நேரில் சந்திப்பதையும் வாழ்த்து சொல்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். அது மட்டுமல்ல பொதுவெளியில் கவனம் ஈர்க்கும் விதமாக மக்களிடத்தில் பல நல்ல செயல்களை செய்யும் தனது ரசிகர்களையும் மற்றும் ரசிகர்கள் அல்லாதவர்களையும் கூட நேரில் வரவழைத்து அவர்களை பாராட்டி கவுரவிக்கவும் அவர் தயங்குவதில்லை.
அந்த வகையில் மதுரையில் ரஜினி ரசிகரான அல்போன்ஸ் என்கிற ரஜினி சேகர் ஹோட்டல் கடை ஒன்றை சிறிய அளவில் நடத்தி வருகிறார். அங்கே பல வருடங்களாக இவர் பரோட்டாவை வெறும் ஐந்து ரூபாய்க்கு மட்டுமே வழங்கி வருகிறார். வெவ்வேறு காலகட்டங்களில் பொருட்களின் விலை ஏற்றம் அதிகரித்தாலும் கூட இவர் தனது கடையை தேடி வந்து சாப்பிடும் சாதாரண மக்கள் பசியோடு இருக்கக் கூடாது என்பதற்காக இப்படி தொடர்ந்து குறைந்த விலையில் இந்த சேவையை செய்து வருகிறார்.
இதுபற்றி நடிகர் ரஜினிகாந்த் தகவல் கேள்விப்பட்டு ரஜினி சேகரை அவரது குடும்பத்துடன் சென்னைக்கு வரவழைத்து அவருக்கு தங்க சங்கிலி அணிவித்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினரிடம் பேசிய ரஜினிகாந்த் சேகர் பற்றி குறிப்பிடும்போது சிறந்த உள்ளம் கொண்டவர் என்றும் மனம் திறந்து பாராட்டியுள்ளார்.




