மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தற்போது மோகன்ராஜா இயக்கி வரும் காட்பாதர் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கையில் சிறிய அளவிலான ஆபரேஷன் செய்து கொண்டார். அவரை 15 நாட்கள் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனால் நவம்பர் முதல் வாரத்தில் இருந்து மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார் சிரஞ்சீவி. மேலும் காட்பாதர் படத்தில் நடித்து வரும்போது போலா சங்கர், வால்டர் வீரய்யா ஆகிய படங்களிலும் நவம்பர் மாதத்தில் இருந்து நடிக்க திட்டமிட்டிருந்தார் சிரஞ்சீவி. ஆனால் இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த முடிவை மாற்றி விட்டார். அதாவது இந்த ஆண்டில் காட்பாதர் படத்தை முடித்து விட்டு 2022ல் இருந்து போலா சங்கர், வால்டர் வீரய்யா ஆகிய படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளார்.