பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் தொடங்கிய ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு படக்குழுவில் சிலருக்கு கொரோனா பரவியதால் நிறுத்தப்பட்டது. அரசியல் ஓய்வு அறிக்கைக்கு பிறகு வெளியில் வராமல் இருந்த ரஜினி தனுசின் புது வீட்டு பூஜை, இளையராஜாவின் புது ஸ்டூடியோவுக்கு வருகை இரண்டுக்கு மட்டும் வெளியில் வந்தார்.
இளையராஜாவின் புது ஸ்டூடியோ ரஜினியின் மனதுக்கு நெருக்கமான இடமாகி விட்டதாம். வாரத்துக்கு ஒரு முறையாவது இளையராஜா ஸ்டூடியோவுக்கு சென்று வருகிறார். இளையராஜாவுடன் மணிக்கணக்கில் மனம்விட்டுப் பேசுகிறாராம். “நான் அடிக்கடி இங்கு வருவது உங்களுக்குத் தொந்தரவா இல்லையே...” எனக் கடந்த வாரம் ரஜினி கேட்க, “நீங்க வர்றது எனக்கு அவ்வளவு ஆறுதலா இருக்கு” என்றாராம் இளையராஜா.