பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் அதிரடி சோதனையில் பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் இருக்கும் ஆர்யன் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுளார்.
சிறையில் இருக்கும் மகனின் கை செலவுக்காக ஷாருக்கான் 4500 ரூபாய் மணியார்டர் அனுப்பி உள்ளார். சிறை விதிமுறைகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை மட்டும் அனுமதிக்கும் என்பதால் இந்த தொகையை அனுப்பி உள்ளார். இந்த தகவலை சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து அவர் சிறை கேண்டீனில் உணவு பொருள் வாங்கி சாப்பிடலாம், துணிகளை சலவை செய்ய கொடுக்கலாம். சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்.