600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி மக்களின் மனதை கவர்ந்த தொடர் யாரடி நீ மோகினி. பேய் நாடகமா குடும்ப நாடகமா என மக்களையே கன்ப்யூஸ் செய்தாலும் சுவாரசியமாக நகர்ந்த திரைக்கதை அத்தொடருக்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. அதே போல ரசிகர்களின் பேச்சைக்கேட்டு க்ளைமாக்ஸை ஷூட் செய்யும் அளவுக்கு ரசிகர்களிடம் மிகவும் நெருக்கமான இடத்தை இந்த தொடர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் க்ளைமாக்ஸ் காட்சியில் வில்லியாக நடித்த சைத்ராவுக்கும் பேயாக நடித்த யமுனாவுக்கும் மிகப் பெரிய சண்டை நடப்பது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதற்காக ரோப், க்ரெயின், ஜாக்கி போன்ற சினிமாக்களில் பயன்படுத்தப்படும் கருவிகளை வைத்து பெரிய சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கம் செய்திருந்தனர். இதில் நடிகைகள் இருவருக்கும் டூப் பயன்படுத்தப்படவில்லை.
இந்நிலையில் அந்த சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட விதத்தை அதில் நடித்த நடிகை யமுனா இன்ஸ்டாகிராமில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதில் சைத்ராவும், யமுனாவும் ரோப்பின் உதவியுடன் எப்படி நடித்தனர் என்பதை பார்க்க முடிகிறது. என்னதான் ரோப் என்றாலும் நடிகைகள் இருவரும் ஒரு சீரியலுக்காக இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.