'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
தியேட்டர்களுக்குப் போட்டியாக ஓடிடி தளங்களிலும் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. நாளை அக்டோபர் 14 ஆயுத பூஜையை முன்னிட்டு தியேட்டர்களில் 'அரண்மனை 3' படமும், ஓடிடி தளங்களில் 'உடன்பிறப்பே, விநோதய சித்தம்' ஆகிய படங்களும் வெளியாகின்றன.
இவற்றில் 'உடன்பிறப்பே' படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது அதிகப் படங்களில் நடித்து முடித்துள்ளவர்களில் சசிகுமாரும் ஒருவர். விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ் ஆகியோருடன் சசிகுமாரும் அதிகப் பட போட்டியில் உள்ளார்.
'எம்ஜிஆர் மகன், ராஜ வம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இவற்றில் 'ராஜவம்சம்' படம் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. 'எம்ஜிஆர் மகன்' படத்தை எப்போதோ வெளியிட்டிருக்க வேண்டியது. ஆனால், கொரோனாவால் தள்ளிப் போனது. இப்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சசிகுமார் நான்கு படங்களில் நடித்து முடித்துள்ளதால் அப்படங்களை தியேட்டர்களில் வெளியிட சரியான தேதிகள் அமைய வாய்ப்பில்லை. எனவே, ஓடிடி தளத்தில் விற்று 'எம்ஜிஆர் மகன்' தயாரிப்பாளர் நல்ல லாபம் பார்த்துவிட்டார். அதை மற்ற சசிகுமார் படத் தயாரிப்பாளர்களும் தொடர்வார்களா அல்லது தியேட்டர்களில் வெளியிட சரியான இடைவெளிக்குக் காத்திருப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.