நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
தியேட்டர்களுக்குப் போட்டியாக ஓடிடி தளங்களிலும் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. நாளை அக்டோபர் 14 ஆயுத பூஜையை முன்னிட்டு தியேட்டர்களில் 'அரண்மனை 3' படமும், ஓடிடி தளங்களில் 'உடன்பிறப்பே, விநோதய சித்தம்' ஆகிய படங்களும் வெளியாகின்றன.
இவற்றில் 'உடன்பிறப்பே' படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது அதிகப் படங்களில் நடித்து முடித்துள்ளவர்களில் சசிகுமாரும் ஒருவர். விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ் ஆகியோருடன் சசிகுமாரும் அதிகப் பட போட்டியில் உள்ளார்.
'எம்ஜிஆர் மகன், ராஜ வம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இவற்றில் 'ராஜவம்சம்' படம் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. 'எம்ஜிஆர் மகன்' படத்தை எப்போதோ வெளியிட்டிருக்க வேண்டியது. ஆனால், கொரோனாவால் தள்ளிப் போனது. இப்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சசிகுமார் நான்கு படங்களில் நடித்து முடித்துள்ளதால் அப்படங்களை தியேட்டர்களில் வெளியிட சரியான தேதிகள் அமைய வாய்ப்பில்லை. எனவே, ஓடிடி தளத்தில் விற்று 'எம்ஜிஆர் மகன்' தயாரிப்பாளர் நல்ல லாபம் பார்த்துவிட்டார். அதை மற்ற சசிகுமார் படத் தயாரிப்பாளர்களும் தொடர்வார்களா அல்லது தியேட்டர்களில் வெளியிட சரியான இடைவெளிக்குக் காத்திருப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.