சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தியேட்டர்களுக்குப் போட்டியாக ஓடிடி தளங்களிலும் தொடர்ந்து புதிய படங்கள் வெளியாகி வருகின்றன. நாளை அக்டோபர் 14 ஆயுத பூஜையை முன்னிட்டு தியேட்டர்களில் 'அரண்மனை 3' படமும், ஓடிடி தளங்களில் 'உடன்பிறப்பே, விநோதய சித்தம்' ஆகிய படங்களும் வெளியாகின்றன.
இவற்றில் 'உடன்பிறப்பே' படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தற்போது அதிகப் படங்களில் நடித்து முடித்துள்ளவர்களில் சசிகுமாரும் ஒருவர். விஜய் சேதுபதி, ஜிவி பிரகாஷ் ஆகியோருடன் சசிகுமாரும் அதிகப் பட போட்டியில் உள்ளார்.
'எம்ஜிஆர் மகன், ராஜ வம்சம், பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கமடா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சசிகுமார். இவற்றில் 'ராஜவம்சம்' படம் நாளை வெளியாவதாக அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளி வைக்கப்பட்டது. 'எம்ஜிஆர் மகன்' படத்தை எப்போதோ வெளியிட்டிருக்க வேண்டியது. ஆனால், கொரோனாவால் தள்ளிப் போனது. இப்போது படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட நல்ல விலைக்குக் கொடுத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.
சசிகுமார் நான்கு படங்களில் நடித்து முடித்துள்ளதால் அப்படங்களை தியேட்டர்களில் வெளியிட சரியான தேதிகள் அமைய வாய்ப்பில்லை. எனவே, ஓடிடி தளத்தில் விற்று 'எம்ஜிஆர் மகன்' தயாரிப்பாளர் நல்ல லாபம் பார்த்துவிட்டார். அதை மற்ற சசிகுமார் படத் தயாரிப்பாளர்களும் தொடர்வார்களா அல்லது தியேட்டர்களில் வெளியிட சரியான இடைவெளிக்குக் காத்திருப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.