இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
திருப்பதியில் உள்ள அலிபிரியில் இருந்து ஆகஸ்டு 10-ந்தேதி அன்று ஈஸ்வரய்யா என்ற சிரஞ்சீவியின் ரசிகர் ஒருவர் சைக்கிளில் 12 நாட்களாக பயணித்து ஆகஸ்டு 22-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற சிரஞ்சீவியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிரஞ்சீவி, ரசிகர்களின் அன்பு எங்களுக்கு பெரிய ஆற்றல். அதேசமயம், அவர்கள் தங்களை வருத்திக் கொள்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று கூறியுள்ள சிரஞ்சீவி, அதையடுத்து தனது தம்பியான நடிகர் பவன் கல்யாணையும் சந்திக்க வேண்டும் என்று அந்த ரசிகர் விருப்பம் தெரிவித்தபோது அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அந்த ரசிகரைஅனுப்பி வைத்திருக்கிறார்.