'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
திருப்பதியில் உள்ள அலிபிரியில் இருந்து ஆகஸ்டு 10-ந்தேதி அன்று ஈஸ்வரய்யா என்ற சிரஞ்சீவியின் ரசிகர் ஒருவர் சைக்கிளில் 12 நாட்களாக பயணித்து ஆகஸ்டு 22-ந்தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற சிரஞ்சீவியின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இந்த செய்தியை வெளியிட்டுள்ள சிரஞ்சீவி, ரசிகர்களின் அன்பு எங்களுக்கு பெரிய ஆற்றல். அதேசமயம், அவர்கள் தங்களை வருத்திக் கொள்வதை ஒருபோதும் விரும்புவதில்லை. அவர்கள் தங்களது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வேண்டும் என்றே விரும்புகிறேன் என்று கூறியுள்ள சிரஞ்சீவி, அதையடுத்து தனது தம்பியான நடிகர் பவன் கல்யாணையும் சந்திக்க வேண்டும் என்று அந்த ரசிகர் விருப்பம் தெரிவித்தபோது அதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அந்த ரசிகரைஅனுப்பி வைத்திருக்கிறார்.