திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு |

முன்பெல்லாம் ஒரு படம் வெளியான பின்பு ஒரு குறிப்பிட்ட பிரிவினர் படம் தங்கள் சமுதாயத்தையும், தங்கள் மதத்தையும் காயப்படுத்துகிறது என எதிர்ப்பு தெரிவித்தார்கள், அதன் பிறகு படப்பிடிப்பில் இருக்கும்போதே சில படங்களுக்கு தாங்களாக கேள்விப்பட்ட தகவல்களை வைத்து எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தார்கள். இப்போது இன்னும் ஒருபடி மேலே போய் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட உடனேயே சிலர் தாங்களாகவே ஏதோ கற்பனை செய்து கொண்டு உடனடியாக எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படித்தான் மலையாளத்தில் பிரபல இயக்குனரும் திலீப்பின் நண்பருமான நாதிர்ஷா என்பவர், தான் அடுத்து இயக்கும் படத்திற்கு ஈஷோ என டைட்டில் வைத்துள்ளார். ஆனால் இந்த டைட்டில் கிறிஸ்துவர்களை புண்படுத்தும் விதமாக இருக்கிறது எனக் கூறி ஒரு சாரார் எதிர்ப்புக் குரல் கொடுத்து வருகிறார்கள்.
அதேசமயம் கிறிஸ்தவ சமயத்தைச் சேர்ந்த திரையுலக பிரபலங்கள் இயக்குனர் நாதிர்ஷாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார்கள் இதுபற்றி இயக்குனர் நாதிர்ஷா கூறும்போது, இந்த படத்தின் டைட்டில் எந்த ஒரு மதத்தினரையும் புண்படுத்தும் நோக்கில் வைக்கப்படவில்லை. படத்தில் ஹீரோவின் கதாபாத்திர பெயராகத்தான் வைக்கப்பட்டுள்ளது. படம் வெளியான பிறகு இப்போது எதிர்ப்பவர்கள் இதற்காகவா நாம் எதிர்த்தோம் என்று அவர்களே நினைப்பார்கள். அதனால் டைட்டிலை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.