வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான மம்முட்டி திரையுலகில் நுழைந்து சமீபத்தில் 50 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்து இருக்கிறார். இதை தொடர்ந்து அனைத்து மொழிகளில் இருந்தும் பல திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும், ரசிகர்களும் இப்போது வரை தங்களது வாழ்த்தை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். இதுவரை 3 தேசிய விருதுகள், 7 கேரள அரசு விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள மம்முட்டி, மலையாள சினிமாவுக்கு மட்டுமல்லாது கேரளாவின் முக்கிய அடையாளமாகவும் பார்க்கப்படுகிறார்.
இந்தநிலையில் மம்முட்டியின் 50வது வருட விழாவை கொண்டாட கேரள அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை கேரள செய்தி ஒளிபரப்பு துறை மற்றும் திரைப்பட வளர்ச்சி துறையைச் சேர்ந்த அமைச்சர் ஷாஜி செரியன் சட்டசபையில் வெளியிட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து மம்முட்டியின் ரசிகர்கள் இன்னும் உற்சாகமாகி சோசியல் மீடியாவில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்