ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவில் மம்முட்டி வளர்ந்து வந்த காலத்தில் அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கொடுத்த படம் தான் 'ஒரு சிபிஐ டைரிக்குறிப்பு'.. 1988-ல் வெளியான இந்த படத்தை தொடர்ந்து சீரான இடைவெளிகளில் இதன் அடுத்தடுத்த பாகங்கள் ஜாக்ரதா(1989), சேதுராம ஐயர் சிபிஐ(2004), நேரறியான் சிபிஐ(2005) என மொத்தம் நான்கு பாகங்கள் இந்த 32 வருடங்களில் வெளியாகியுள்ளன.
இந்த நான்கு பாகங்களையும் இயக்கியவர் இயக்குனர் மது.. தமிழில் 'மௌனம் சம்மதம்' என்கிற படத்தை இயக்கியவர் இவர்தான். இந்த நான்கு பாகங்களுக்கும் கதை எழுதியவர் பிரபல சீனியர் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி. இந்தப்படத்தின் 5ஆம் பாகம் துவங்குவது கிட்டத்தட்ட 15 வருடங்களாகவே தள்ளிப்போய்க் கொண்டிருந்தது.
இந்த நிலையில் வரும் ஆக-17ஆம் தேதி கேரளாவின் சிறப்பு வாய்ந்த சிங்கம் மாதத்தின் முதல் நாளன்று இந்தப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக ஊள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் கூட, இந்தப்படத்தின் கதாசிரியர் எஸ்.என்.சுவாமி மம்முட்டியை நேரில் சந்தித்து இந்த படத்தை துவங்குவது பற்றி பேசிவிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.