செல்வத்தைத் தருவாரா 'குபேரா' ? திரையுலகம் எதிர்பார்ப்பு… | ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' |
தெலுங்கு இயக்குனர் சுரேஷ்பாபுவின் மகன்களில் ஒருவரான ராணா டகுபதி, பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததை தொடர்ந்து, தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக ஒரு இடத்தை பிடித்து நின்றுவிட்டார். இதையடுத்து அவரது தம்பி அபிராம் டகுபதியும் விரைவில் ஹீரோவாக அறிமுகமாக இருக்கிறார். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் தேஜா இயக்க உள்ளார். சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை அவரே கூறி இருக்கிறார். நடிகை ஸ்ரீரெட்டி காஸ்டிங் கவுச் பற்றி வெளியிட்ட அதிரடி தகவல் மூலம், பரபரப்பான செய்திகளில் இடம் பிடித்தவர் தான் இந்த அபிராம்..
தான் அறிமுகமாகும் படம் பற்றி அபிராம் கூறும்போது, “என் தாத்தாவின் ஆசை என்னையும் நடிகனாக்கி பார்க்கவேண்டும் என்பது.. அவர் இருந்திருந்தால் அது முன்கூட்டியே நடந்திருக்கும். தற்போது எனது தந்தையின் ஆதரவுடன் ஹீரோவாக அறிமுகமாகிறேன். ஏற்கனவே 'நானே ராஜா நானே மந்திரி' பட தயாரிப்பில் இயக்குனர் தேஜாவுடன் இணைந்து பணிபுரிந்துள்ளேன். அவர் அறிமுகப்படுத்திய பல நடிகர்கள் மிகப்பெரிய அளவில் பெயர் பெற்றுள்ளனர். மேலும் அவர் சொன்ன கதை என் மாமா வெங்கடேஷ், சகோதரர் ராணா உட்பட குடும்பத்தினர் அனைவருக்குமே பிடித்துவிட்டது. தற்போதிருக்கும் நிலைமை சீரானதும் பட வேலைகள் தொடங்கும்” என கூறியுள்ளார் அபிராம் டகுபதி.