'மீசைய முறுக்கு 2' இரண்டாம் பாடல் ஏப்.8ல் வெளியாகிறது! | 'நூறு சாமி' படத்தின் டீசர் வெளியானது! | 'மிஸ்டர். எக்ஸ்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் மற்றும் டிஜிட்டல்,சாட்டிலைட் உரிமை விவரங்கள்! | அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளர் ஆக ஏ.ஆர். ரஹ்மான்! | ஏப்.17ல் விக்ரமின் அடுத்த பட அறிவிப்பு! | பிளாஷ்பேக்: தணிக்கைக் குழுவினரால் வெற்றியைத் தவறவிட்ட “காஞ்சித் தலைவன்” | என் அண்ணன், பாட்ஷா, டூரிஸ்ட் பேமிலி - ஞாயிறு திரைப்படங்கள் | டப்பிங் படங்களை கண்டு கொள்ளாத தமிழ் ரசிகர்கள் | ஆயிரத்தில் ஒருத்தி சாரா அர்ஜுன் | சரிதாவை பார்க்க சுந்தர்.சி மகளின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த சுசித்ரா மோகன்லால் |

கடந்த 2018ல் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் ஒடியன் என்கிற படத்தை இயக்கியவர் விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன். மிகப்பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து கடைசியில் அந்தப்படத்தை மிகப்பெரிய தோல்விப்படமாக தந்து, மோகன்லால் ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளானார். அதை தொடர்ந்து சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மோகன்லாலை வைத்து மகாபாரத பீமன் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்க, பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பண மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் நேற்று. கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீகுமார் மேனன். இந்த தகவல் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவல்சம் என்கிற நிதி நிறுவனத்திடம் பட தயாரிப்புக்காக ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிய ஸ்ரீகுமார், அதன்பின் அந்த நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. முறையான பதிலும் சொல்லவில்லை.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நேற்று பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீகுமார் மேனன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக அவர் விண்ணப்பித்த முன் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது..