25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கடந்த 2018ல் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் ஒடியன் என்கிற படத்தை இயக்கியவர் விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன். மிகப்பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து கடைசியில் அந்தப்படத்தை மிகப்பெரிய தோல்விப்படமாக தந்து, மோகன்லால் ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளானார். அதை தொடர்ந்து சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மோகன்லாலை வைத்து மகாபாரத பீமன் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்க, பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பண மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் நேற்று. கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீகுமார் மேனன். இந்த தகவல் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவல்சம் என்கிற நிதி நிறுவனத்திடம் பட தயாரிப்புக்காக ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிய ஸ்ரீகுமார், அதன்பின் அந்த நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. முறையான பதிலும் சொல்லவில்லை.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நேற்று பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீகுமார் மேனன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக அவர் விண்ணப்பித்த முன் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது..