பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கடந்த 2018ல் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் ஒடியன் என்கிற படத்தை இயக்கியவர் விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன். மிகப்பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து கடைசியில் அந்தப்படத்தை மிகப்பெரிய தோல்விப்படமாக தந்து, மோகன்லால் ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளானார். அதை தொடர்ந்து சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மோகன்லாலை வைத்து மகாபாரத பீமன் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்க, பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பண மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் நேற்று. கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீகுமார் மேனன். இந்த தகவல் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவல்சம் என்கிற நிதி நிறுவனத்திடம் பட தயாரிப்புக்காக ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிய ஸ்ரீகுமார், அதன்பின் அந்த நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. முறையான பதிலும் சொல்லவில்லை.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நேற்று பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீகுமார் மேனன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக அவர் விண்ணப்பித்த முன் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது..