சினிமாவில் எதுவும் நிரந்தரமில்லை! : நந்திதா | அனுஷ்கா பிறந்தநாளில் வெளியான 'கதனார்' படத்தின் அழகிய போஸ்டர்! | யஷ் படத்துடன் மோதுவதில் பயமில்லை : தெலுங்கு இளம் ஹீரோ தில் பேச்சு | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்திலிருந்து வெளியான பிரித்விராஜ் முதல்பார்வை | கமலின் 'நாயகன்' படத்தின் ரீரிலீஸுக்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம்! | கத்ரினா கைப் - விக்கி கவுஷல் நட்சத்திர தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது! | உருவக்கேலி செய்ததாக நடிகை கவுரி கிஷன் வேதனை | கமல் 237வது படத்தில் இணைந்த தொழில்நுட்ப கலைஞர்கள் | எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க முயற்சிக்காதீங்க : அஜித் | தெலுங்கிலும் இன்று வெளியான பிரணவ் மோகன்லால் ஹாரர் படம் |

கடந்த 2018ல் மோகன்லாலை வைத்து மலையாளத்தில் ஒடியன் என்கிற படத்தை இயக்கியவர் விளம்பர பட இயக்குனரான ஸ்ரீகுமார் மேனன். மிகப்பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து கடைசியில் அந்தப்படத்தை மிகப்பெரிய தோல்விப்படமாக தந்து, மோகன்லால் ரசிகர்களின் கண்டனங்களுக்கு ஆளானார். அதை தொடர்ந்து சுமார் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் மோகன்லாலை வைத்து மகாபாரத பீமன் கதையை படமாக்கும் முயற்சியில் இறங்க, பின்னர் அதுவும் கைவிடப்பட்டது.
இந்நிலையில் பண மோசடி செய்தார் என்கிற புகாரின் பேரில் நேற்று. கைது செய்யப்பட்டுள்ளார் ஸ்ரீகுமார் மேனன். இந்த தகவல் மலையாள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீவல்சம் என்கிற நிதி நிறுவனத்திடம் பட தயாரிப்புக்காக ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கிய ஸ்ரீகுமார், அதன்பின் அந்த நிறுவனம் பலமுறை பணத்தை திருப்பி கேட்டும் பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. முறையான பதிலும் சொல்லவில்லை.
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் அளித்த புகாரின் பேரில் நேற்று பாலக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து ஸ்ரீகுமார் மேனன் கைது செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக அவர் விண்ணப்பித்த முன் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது..