'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனருக்கு முன் ஜாமின் வழங்கிய நீதிமன்றம் | 3ம் மனுஷியின் 3ம் தர டுவீட்.. வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்: திரிஷா விவகாரத்தில் பார்த்திபன் கருத்து | கொரிய நடிகர்கள் ரசித்த 'தளபதி' பாடல் | ரஜினிகாந்த் எழுதும் சுயசரிதை: விரைவில் புத்தகம் வெளியாகிறது | பாரதிராஜா உடல்நிலை எப்படி இருக்கிறது? யாரும் பேச மறுப்பதால் குழப்பம் | பிளாஷ்பேக்: தொலைக்காட்சி நிறுவனம் புறக்கணித்த கதை சினிமாவில் வெள்ளி விழா கொண்டாடியது | லோக்கல் டைம்ஸ்: 13ம் தேதி வெளியாகும் புதிய வெப் சீரிஸ் | கலையரசனின் 'கொலைச்சேவல்' 13ம் தேதி ரிலீஸ் | மரகதமலை: பெண் இயக்குனரின் பேண்டசி படம் | 'டெக்ஸ்லா' கதை இதுதானா? |

மகேஷ்பாபு தற்போது தெலுங்கில் நடித்து வரும் படம் 'சர்க்காரு வாரி பாட்டா'. இயக்குனர் பரசுராம் இயக்கிவரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்புவரை நடைபெற்று வந்தது. ஒருபக்கம் கொரோனா பரவல் அதிகரிக்க, இன்னொரு பக்கம் படக்குழுவினரில் சிலரும் மகேஷ்பாபுவின் பெர்சனல் ஒப்பனை கலைஞரும் கூட கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். இதனை தொடர்ந்து படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் அந்தப்படத்தில் துணை இயக்குனராக பணிபுரிந்த, 39 வயதே ஆன குமார் வட்டி என்பவர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி இன்று மரணத்தை தழுவியுள்ளார். இது மகேஷ்பாபு படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இயக்குனர் பரசுராமிடம் பல படங்களில் உதவியாளராக பணியாற்றிய குமார் வட்டி, கடந்த 2017ல் 'மா அப்பாயி' என்கிற படத்தின் மூலம் இயக்குனராகவும் மாறினார். தற்போது தனது குருநாதர் பரசுராம் இயக்கிவரும் மகேஷ்பாபுவின் படத்தில் துணை இயக்குனராக பணியாற்றி வந்த நிலையில், கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை எடுத்து வந்தார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார் குமார் வட்டி