டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலை, திரையுலகினரை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருவதுடன், பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அப்படி தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துவந்த ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பும், படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த சிரஞ்சீவியின் கேரவன் ஓட்டுனர் இன்று மரணம் அடைந்தார்.. இது சிரஞ்சீவி மற்றும் படத்தின் தயாரிப்பாளரான அவரது மகன் ராம்சரண் இருவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முன்னதாக ஆச்சார்யா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த பாலிவுட் நடிகர் சோனு சூட்டும் கொரோனா தொற்றால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆச்சார்யா படக்குழுவினர் அனைவரும் முதலில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிலைமை சரியான பின் படப்பிடிப்பை துவங்கி கொள்ளலாம் என்றும் சிரஞ்சீவி கேட்டுக்கொண்டுள்ளார். .