தெலுங்கில் ரீமேக் ஆகும் 'லப்பர் பந்து' | ஆர்யாவிற்கு ஜோடியாகும் அனுபமா பரமேஸ்வரன்! | 'ஸ்பிரிட்' படத்தில் சிரஞ்சீவி? சந்தீப் ரெட்டி வங்காவின் பதில் இதோ! | கமல், ரஜினி இணையும் படம்: டிசம்பர் 12ல் அறிவிக்கப்படுமா? | எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் |

வேகமாக பரவி வரும் கொரோனாவின் இரண்டாவது அலை, திரையுலகினரை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. தியேட்டர்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருவதுடன், பல படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. அப்படி தெலுங்கில் சிரஞ்சீவி நடித்துவந்த ஆச்சார்யா படத்தின் படப்பிடிப்பும், படக்குழுவினர் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தால் சமீபத்தில் நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த சிரஞ்சீவியின் கேரவன் ஓட்டுனர் இன்று மரணம் அடைந்தார்.. இது சிரஞ்சீவி மற்றும் படத்தின் தயாரிப்பாளரான அவரது மகன் ராம்சரண் இருவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
முன்னதாக ஆச்சார்யா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த பாலிவுட் நடிகர் சோனு சூட்டும் கொரோனா தொற்றால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஆச்சார்யா படக்குழுவினர் அனைவரும் முதலில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நிலைமை சரியான பின் படப்பிடிப்பை துவங்கி கொள்ளலாம் என்றும் சிரஞ்சீவி கேட்டுக்கொண்டுள்ளார். .