அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக கதாசிரியர், நடிகர், இயக்குனர் என பன்முகம் கொண்ட கலைஞராக வலம் வந்தவர் கதாசிரியர் பி.பாலச்சந்திரன்(62). கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த இவர் இன்று(ஏப்., 5) காலமானார்.
மோகன்லால், மம்முட்டி நடித்த சில படங்களுக்கு கதை எழுதியுள்ள பாலச்சந்திரன், கடந்த 2016ல் துல்கர் சல்மான் நடித்த, விருதுகள் பல பெற்ற கம்மட்டிபாடம் திரைப்படத்திற்கு கதை எழுதியிருந்தார். ஒருபக்கம் கதாசிரியராக இருந்து கொண்டே, இன்னொரு பக்கம் குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து பயணித்து வந்தார் மேலும் கேரள சாகித்திய அகாடமி விருது கேரள சங்கீத நாடக அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.
கடைசியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு, மம்முட்டி நடிப்பில் வெளியான '1'' என்கிற படத்தில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பாலச்சந்திரன். கம்மட்டிபாடம் படத்தில் பணியாற்றியபோது இவருடன் நெருங்கிப் பழகிய நடிகர் துல்கர் சல்மான் இவரது மறைவுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.