சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாகுபலி-2வைத் தொடர்ந்து ஜூனியர் என்டிஆர், ராம்சரணை இணைத்து மல்டி ஹீரோ படத்தை இயக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் ராஜமவுலி. இந்த படத்திலும் கிராபிக்ஸ் காட்சிகள் அதிகமாக இடம் பெறுவதாக கூறியுள்ள அவர் படத்திற்கு ஆர்ஆர்ஆர் என்ற தலைப்பினை தற்காலிகமாக வைத்துள்ளார்.
இந்த படம் எந்தமாதிரியான கதையில் உருவாகிறது என்பதை இன்னும் ராஜமவுலி அறிவிக்கவில்லை. ஆனால், தற்போது இப்படம் கேங்ஸ்டர் கதையில் தயாராகயிருப்பது தெரியவந்துள்ளது. இதில், கேங்ஸ்டர் வேடத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க, உயர் போலீஸ் அதிகாரியாக ராம் சரண் நடிக்கிறாராம். அதனால் அவர்கள் இருவரையும் உடல்ரீதியாக தங்களை தயார்படுத்த, டிரைனர்களை வைத்து தீவிர பயிற்சி கொடுத்து வருகிறாராம் ராஜமவுலி.