ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போன்று மலையாளத்தில் ஒளிபரப்பாகும் கைரளி சேனலில் நடிகை ஊர்வசி ஜீவிதம் சாக்ஷி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிரச்சினையுள்ள குடும்பங்களை அழைத்து வந்து ஷோபாவில் உட்கார வைத்து பஞ்சாயத்து பேசுகிற நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி ஆண்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பல ஆண்கள் தங்களை ஊர்வசி திட்டி அவமானப்படுத்தியதாக மனித உரிமை ஆணயத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். புகார்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரள மாநில மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊர்வசிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. புகாரின் மீது வருகிற டிசம்பர் 9ந் தேதி விசாரணை நடத்துகிறது.