மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போன்று மலையாளத்தில் ஒளிபரப்பாகும் கைரளி சேனலில் நடிகை ஊர்வசி ஜீவிதம் சாக்ஷி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிரச்சினையுள்ள குடும்பங்களை அழைத்து வந்து ஷோபாவில் உட்கார வைத்து பஞ்சாயத்து பேசுகிற நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி ஆண்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பல ஆண்கள் தங்களை ஊர்வசி திட்டி அவமானப்படுத்தியதாக மனித உரிமை ஆணயத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். புகார்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரள மாநில மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊர்வசிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. புகாரின் மீது வருகிற டிசம்பர் 9ந் தேதி விசாரணை நடத்துகிறது.




