புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தமிழில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வரும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி போன்று மலையாளத்தில் ஒளிபரப்பாகும் கைரளி சேனலில் நடிகை ஊர்வசி ஜீவிதம் சாக்ஷி என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். பிரச்சினையுள்ள குடும்பங்களை அழைத்து வந்து ஷோபாவில் உட்கார வைத்து பஞ்சாயத்து பேசுகிற நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியில் ஊர்வசி ஆண்களை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கு கொண்ட பல ஆண்கள் தங்களை ஊர்வசி திட்டி அவமானப்படுத்தியதாக மனித உரிமை ஆணயத்திற்கு புகார் அனுப்பி உள்ளனர். புகார்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து கேரள மாநில மனித உரிமை ஆணையம் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ஊர்வசிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. புகாரின் மீது வருகிற டிசம்பர் 9ந் தேதி விசாரணை நடத்துகிறது.