வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

மலையாளத்தில் இளம் முன்னணி நடிகர் நிவின்பாலி நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை வெளியீடாக 'சர்வம் மாயா' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை இளம் இயக்குனர் அகில் சத்யன் இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 100 கோடிக்கு மேல் வசூலும் செய்தது. சொல்லப்போனால் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நிவின்பாலிக்கு இந்த படம் மீண்டும் புத்துணர்ச்சியை அளித்துள்ளது.
இதனை தொடர்ந்து அடுத்ததாக அகில் சத்யன் இயக்க உள்ள படத்தில் மீண்டும் நிவின்பாலி ஹீரோவாக நடிக்க இருக்கிறார். இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் அகில் சத்யனே கூறியுள்ளார். இந்த படம் கிராமத்து பின்னணியில் உருவாகும் ரொமான்ஸ் கலந்த காமெடி படமாக உருவாக இருக்கிறதாம். இன்னும் சொல்லப்போனால் ஹிந்தியில் வெளியான 'ஏ ஜவானி ஹாய் தீவானி' என்கிற படத்தை போல நாங்கள் அடுத்து இணைய இருக்கும் படத்தை தற்போது 'ஏ ஜவானி ஆலுவா தீவானி' என்றுதான் காமெடியாக குறிப்பிட்டு வருகிறோம் என்றும் கூறியுள்ளார் இயக்குனர் அகில் சத்யன்.




