விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் |
விஜய் நடிப்பில் விவசாயத்திற்காக போராடும் கதைக்களத்தில் உருவான கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக் சிரஞ்சீவியின் 150வது படமாக டோலிவுட்டில் தயாராகி வருகின்றது. தமிழில் சர்ச்சைகளுக்கு மத்தியில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் திரைக்கு வந்த கத்தி படத்தை தெலுங்கில் கத்திலான்டோடு என்ற பெயரில் இயக்குனர் விவி விநாயக் இயக்குகின்றார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளை நிறைவு செய்து படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்புகளில் இறங்கியுள்ளது. இருப்பினும் இப்படத்தில் நடிக்கவிருக்கும் வில்லனை தற்போதுதான் இயக்குனர் தேர்வு செய்துள்ளார். கணிதன் படத்தில் வில்லனாக நடித்த தருண் அரோரா இப்படத்தில் சிரஞ்சீவியுடன் மோத உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கத்தி படத்தில் நடித்த நீல் நிதின் முகேஷ், அல்லது பாலிவுட் பிரலம் விவேக் ஓப்ராய் போன்றோர் சிரஞ்சீயின் 150வது படத்தில் வில்லனாக நடிக்கலாம் என கூறப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு தருண் அரோராவிற்கு கிடைத்துள்ளது. சிரஞ்சீவியுடன் சுடலனி உண்டி படத்தில் ஜோடி சேர்ந்து நடித்த அஞ்சலா ஜவேரியின் கணவர்தான் தருண் அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.