சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஒரு காலத்தில் படங்களுக்குக் கதை எழுதித் தரும் கதையாசிரியர்கள் நிறைய பேர் இருந்தார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் கதை இலாகா என ஒரு குழுவே செயல்படும். சமீப காலமாக தமிழ் சினிமாவில் கதையாசிரியர்கள் என்பது மிகவும் குறைந்து போய்விட்டது, ஏன் இல்லவே இல்லை என்று கூட சொல்லலாம். நல்ல வேளை வசனகர்த்தார்கள் மட்டும் நிறைய பேர் இருக்கிறார்கள். அதில் பலர் கூட ஹீரோக்களுக்கு 'பன்ச்' வசனங்கள் எழுதிக் கொடுத்தால்தான் பெயர் வாங்க முடிகிறது.
ஆனால், தெலுங்குத் திரையுலகில் அப்படி இல்லை. அங்கு இன்னமும் ஒரு சில கதையாசிரியர்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்குப் பிடிக்கும் விதத்தில்தான் அவர்களால் கதையை எழுதித் தர முடியவில்லை. கடந்த ஆண்டு அவருடைய பிறந்த நாளன்றே 150வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்தார்கள். அதன்பின் பூரி ஜெகன்னாத் இயக்குவதாகச் செய்திகள் வெளியானது. அந்தக் கதையிலும் தனக்குத் திருப்தியில்லை என்று சிரஞ்சீவி விலகிவிட்டார் என்றார்கள். தொடர்ந்து பல கதையாசிரியர்களிடமும், இயக்குனர்களிடமும் கதை கேட்டாராம் சிரஞ்சீவி. எதுவுமே அவருக்குத் திருப்தியாக இல்லை என்பதால்தான் அவருடைய படம் தள்ளிப் போகிறதாம். இது சம்பந்தமாக தனது நெருங்கிய வட்டாரங்களிடமும் தெலுங்குத் திரையுலகில் திறமையான கதையாசிரியர்கள் இல்லை என்று வருத்தப்பட்டிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழிலிருந்து விஜய் நடித்த 'கத்தி', கவுண்டமணி நடித்த '49 ஓ' ஆகிய படங்களை அவர் ரீமேக் செய்யும் எண்ணத்தில் இருந்தார் என்றும் கூட சொன்னார்கள். இப்போதோ, தென்னிந்தியாவை விட்டு, பாலிவுட் கதாசிரியகர்களிடம் கதை கேட்கலாமா என யோசித்து வருகிறார்களாம். எப்படியும் அடுத்த ஆண்டு சிரஞ்சீவியின் 150வது படம் பற்றிய அறிவிப்பு வந்துவிடும் என்று அவருடைய ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.