தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனரான ஜோஷி கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜோஜு ஜார்ஜ் நடித்த 'அந்தோணி' என்ற படத்தை இயக்கினார். இப்போது அவர் உன்னி முகுந்தனுடன் பான் இந்தியா படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை உன்னி முகுந்தன் பிலிம்ஸ், ஜன்ஸ்டீன் மீடியாவுடன் இணைந்து தயாரிக்கிறது.
இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் "தேசிய விருது வென்ற 'மேப்படியான்' மற்றும் 100 கோடி வசூலித்த ஆக்ஷன் திரைப்படமான 'மார்கோ' படங்களை தொடர்ந்து உன்னி முகுந்தன் பிலிம்ஸ் தற்போது இயக்குநர் ஜோஷியுடன் இணைகிறது.
'பொரிஞ்சு மரியம் ஜோஷ்', 'கிங் ஆப் கோதா' போன்ற படங்களில் திரைக்கதைக்காக அறியப்பட்ட எழுத்தாளர், இயக்குநர் அபிலாஷ் என்.சந்திரன், இயக்குநர் ஜோஷியுடன் இந்தப் படத்தில் இணைகிறார்.
இதன் மூலம் இயக்குநர் ஜோஷியின் புதிய படம் வெறும் ஆக்ஷன் மட்டுமல்லாது ஆழமான எமோஷன், மறக்க முடியாத தருணங்களையும் கொண்டிருக்கும் என்பதை உறுதிப்படுக்கிறது. இதற்கு முன்பு பார்த்திராத வகையில் உன்னி முகுந்தன் ஆக்ஷன் அவதாரத்தில் நடிக்கிறார்" என்று கூறப்பட்டுள்ளது.