துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் | சான்வே மேக்னாவின் புதிய படம் | பிளாஷ்பேக்: இளையராஜாவின் ஆல்பம் இசையை பின்னணி இசையாக பயன்படுத்திய பாலுமகேந்திரா | பிளாஷ்பேக் : கடைசி வரை கஷ்டத்தில் வாழ்ந்த புஷ்பவல்லி | நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ் | ‛நூறு சாமி' படக் கதை குறித்து பகிர்ந்த சசி | முத்து என்கிற காட்டானுக்கு பின்னால் நடந்ததையும் வெப் தொடராக எடுக்கலாம் : விஜய் சேதுபதி | ஓடிடியில் வரவேற்பைப் பெற்ற 'மேட் இன் கொரியா' | துரந்தர் : இரண்டு பாகங்களிலும் 1000 கோடி வசூலித்த முதல் இந்தியத் திரைப்படம் | பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா |

தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது 'வார் 2' படத்தில் வில்லன் ஆக நடித்துள்ளார். இது அல்லாமல் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படங்களை தொடர்ந்து திரி விக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர் கடவுள் குமாரசாமி அதாவது முருகன் ஆக நடிக்கவுள்ளார் என்கிறார்கள். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெலுங்கு சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
தெலுங்கு சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரிவிக்ரம். இவரது இயக்கத்தில் அல்லு அர்ஜுன் ஒரு படம் நடிப்பதாக இருந்தது. ஆனால் அல்லு அர்ஜுன் திடீரென அட்லி படத்தில் நடிக்க போய்விட்டதால் இவரின் படம் டிராப் ஆனது. இதனால் அந்த கதையை ஜுனியர் என்டிஆரை வைத்து இயக்க போவதாகவும் இல்லை ஜுனியர் என்டிஆர் படத்தின் கதை வேறு என இருவிதமான தகவல்கள் வருகின்றன.