பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

நடிகர் மம்முட்டியின் படங்கள் இந்த வருடம் கிட்டத்தட்ட சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக சொல்லப்பட்ட நிலையில் அது எல்லாம் ஒன்றும் இல்லை என்பது போல தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் மம்முட்டி. அதிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என நினைக்கும் மம்முட்டியின் தற்போதைய புதிய போட்டோ ஒன்று தான் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது மம்முட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி கால் மேல் கால் போட்டு அமர்ந்திருக்கிறார். அதில் மேல் உள்ள கால் பாதத்தை ஒரு ஸ்டாண்ட் போல பயன்படுத்தி தனக்கு கொடுக்கப்பட்ட பிளாக் டீ டம்ளரை அதில் வைத்துவிட்டு மொபைல் போனில் ஏதோ மும்முரமாக பார்த்துக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் ரசிகர்களை ரொம்பவே ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதே சமயம் இந்த புகைப்படத்தில் அவரது காலில் கொலுசு அணிந்திருப்பதால் இது சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான 'பஷூக்கா' திரைப்படத்திற்காக அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.