கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் | ‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் |
நடிகர் மோகன்லாலின் படங்கள் பெரும்பாலும் எந்த சர்ச்சைக்குள்ளும் சிக்காமல் தான் இதுவரை வெளியாகி வந்தன. இந்த நிலையில் சமீபத்தில் 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமாக பிரித்விராஜ் டைரக்ஷனில் வெளியான 'எல்2 எம்புரான்' திரைப்படத்தில் இந்து மதத்தினரை புண்படுத்தும் விதமாக சில காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்று சர்ச்சை கிளம்பியது. இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பை சேர்ந்த பலர் படத்தின் சில காட்சிகளை நீக்க வேண்டும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி 2 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டன. நடிகர் மோகன்லால் இந்த காட்சிகள் குறித்து தனது வருத்தத்தை தெரிவித்து உள்ளார்.
இந்த நிலையில் மத்தியில் உள்ள ஆளுங்கட்சியான பா.ஜ.,வை சேர்ந்த எம்.பி.,யும் மத்திய அமைச்சருமான சுரேஷ்கோபி சமீபத்தில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டபோது அவரிடம் நிருபர்கள் எம்புரான் பட சர்ச்சை குறித்து கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்து விட்டார். மேலும் தொடர்ந்து அதுபற்றியே கேட்ட நிருபரிடம் பாசிட்டிவான கேள்விகளை மட்டுமே கேளுங்கள் என்று கூறி பதில் சொல்லாமல் நகர்ந்து விட்டார்.
பொதுவாகவே மோகன்லால் மீது மிகப்பெரிய நட்பும் மரியாதையும் கொண்டுள்ள சுரேஷ்கோபி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமா கமிஷன் அறிக்கை தொடர்பாக நடிகர் சங்கம் சர்ச்சையில் சிக்கியபோது கூட அதன் தலைவரான மோகன்லாலுக்கு ஆதரவாகவே நின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.