வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய அளவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான 'எல் 2 எம்புரான்'. கடந்த 2019ல் வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக இது வெளியாகியுள்ளது. அரசியல் பின்னணியில் உருவாகி இருந்தாலும் கூட லூசிபர் படம் வெளியான போது எந்தவித சலசலப்பும் ஏற்படவில்லை.
அதே சமயம் தற்போது வெளியாகி உள்ள இதன் இரண்டாம் பாகத்தில் இந்துக்களின் உணர்வை புண்படுத்தும் விதமாக காட்சிகள் இடம் பெற்றுள்ளது கடந்த இரண்டு நாட்களாக மிகப்பெரிய பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி உள்ளது. படத்தின் நாயகன் மோகன்லாலே இதற்காக வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் மோகன்லாலை வைத்து தொடர்ந்து ராணுவ பின்னணி கொண்ட படங்களாக இயக்கி வந்த இயக்குனர் மேஜர் ரவி தற்போது புதிய தகவல் ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது, “மோகன்லால் பொறுத்தவரை அவர் எப்போதுமே ரிலீஸுக்கு முன்பு தனது முழு படத்தையும் பார்க்கும் வழக்கம் கொண்டவர் அல்ல. தான் நடித்த காட்சிகளுக்கு டப்பிங் பேசுவதோடு மட்டுமே அவர் தனது பணிகளை நிறைவு செய்து விடுகிறார். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடும் படத்தில் எம்புரான் படத்தில் அவர் இடம்பெறும் மொத்த காட்சிகளே ஒரு மணி நேரம்தான் இருக்கின்றன. அதனால் மீதி என்ன காட்சிகள் எடுக்கப்படுகின்றன என்பது குறித்து அவரது கவனத்திற்கு வராமல் போய் இருக்கலாம். அப்படி அவர் முழு படத்தையும் பார்த்து இருந்தால் நிச்சயம் இது போன்ற காட்சிகளை அனுமதித்திருக்கவே மாட்டார்” என்று கூறியுள்ளார். மோகன்லாலுக்கு ஆதரவாக அவர் வெளியிட்டுள்ள இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




