
துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர்
இதுபற்றி அவர் கூறும்போது, “நியூ ஜெர்சியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து படப்பிடிப்பை நடத்தி வந்தோம். ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பை குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் நீடித்துக் கொண்டே சென்றது. இதனால் வீட்டின் உரிமையாளர் எங்கள் மீது கோபமானார். ஒரு நாள் திடீரென வீட்டிற்குள் நுழைந்த அவர் படக்குழுவினர் அனைவரையும் கெட்ட வார்த்தையால் திட்டி வெளியேறுங்கள் என்று கூறினார். அது மட்டுமல்ல வீட்டின் கீழ் தளத்திற்கு சென்ற அங்கிருந்த தன்னுடைய துப்பாக்கியை எடுத்து வந்தவர் பட குழுவினரை பார்த்து மிரட்டத் துவங்கினார். பலரும் அதிர்ந்து போய் காத்த துவங்கினார்கள்.
அந்த சமயத்தில் ஒரு அறையில் அமர்ந்திருந்த நடிகர் துல்கர் சல்மான் அடுத்த காட்சிக்காக தயாராகிக் கொண்டிருந்தார். அந்த அறைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த வீட்டு ஓனரை பார்த்ததும், யார் நீங்கள் உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று துல்கர் சல்மான் கேட்க, உடனே இங்கு இருந்து வெளியேறு என்று வீட்டு உரிமையாளர் கத்தியுள்ளார். “நான் இந்த படத்தின் ஹீரோவாக நடிக்கிறேன்.. படப்பிடிப்பை முடிக்காமல் என்னால் வெளியேற முடியாது.. நீங்கள் படப்பிடிப்புக்கு இடைஞ்சல் கொடுக்காமல் வெளியேறுங்கள்” என்று துல்கர் சல்மான் கூறினார்.
இதனால் கோபமான வீட்டு உரிமையாளர் “நீ யாரா இருந்தாலும் எனக்கு அது பற்றி கவலை இல்லை. கெட் அவுட்” என்று கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுமோ என பயந்த இயக்குனர் மார்ட்டின் பரக்கத் மற்றும் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான் இருவரும் இணைந்து துல்கர் சல்மானை பத்திரமாக வெளியே அழைத்து வந்தனர். அதன் பிறகு ஒரு வழியாக அந்த வீட்டு உரிமையாளரை சமாதானப்படுத்தி மீதி படப்பிடிப்பை முடித்துவிட்டு கிளம்பி வந்தோம்” என்று கூறியுள்ளார்.


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!