ராஜமவுலி இயக்கத்தில் மூன்று பாகங்களாக 'மகாபாரதம்' | படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைக்க மறுப்பு : பெப்சி மீது தயாரிப்பாளர் சங்கம் வழக்கு | பிளாஷ்பேக்: இரண்டு ஆக்சன் ஹீரோக்கள் மோதிய 'நல்ல நாள்' | பிளாஷ்பேக் : ஆண்டாள் பெருமையை உலகிற்கு சொன்ன படம் | புஷ்பா 2, தியேட்டர் நெரிசல் : குணடைந்த சிறுவன் | நான் இன்னும் மிடில் கிளாஸ் தான்... என் சாதனைக்கு உரியவர் ஷாலினி : அஜித் பேட்டி | டெஸ்ட்டில் விட்டதை கேசரி சாப்டர் 2-வில் பிடிப்பாரா மாதவன் | 300 தியேட்டர்களில் வெளியாகும் டூரிஸ்ட் பேமிலி | அழகுக்காக அறுவை சிகிச்சையா : ரகுல் ப்ரீத் சிங் பதில் | ''அவுரங்கசீப்புக்கு 2 அறை கொடுக்க வேண்டும்'' ; சூர்யா பட விழாவில் விஜய் தேவரகொண்டா காட்டம் |
சென்னையில் திருவான்மியூர், ஈசிஆர் உள்ளிட்ட பகுதிகளில் சினிமா பிரபலங்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக மாறி உள்ளது. அதேபோலத்தான் கொச்சியில் உள்ள பனம்பள்ளி நகர் என்கிற பகுதி சினிமா பிரபலங்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியாக இருக்கிறது. இங்கே மம்முட்டிக்கு சொந்தமான வீடு இருந்தது. அங்கே தான் ரொம்ப நாட்களாக மம்முட்டி வசித்து வந்தார். ஆனால் அவர் தற்போது எர்ணாகுளத்தில் உள்ள ஏலங்குளம் என்கிற பகுதிக்கு புதிய வீடு கட்டி சென்று சில வருடங்களாக அங்கு வசித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது பனம்பள்ளி நகரில் உள்ள அவரது வீடு புதுப்பிக்கப்பட்டு தினசரி வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
அதாவது கேரளாவை சுற்றி பார்க்க வருபவர்கள் குறிப்பாக கொச்சிக்கு வருபவர்கள் மம்முட்டியை பார்க்க முடிகிறதோ இல்லையோ அவர் குடியிருந்த வீட்டிலாவது ஒருநாள் தங்கி செல்லலாம் என்ற ஆசையை நிறைவேற்றுவதற்காகவே இப்படி வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் ஒருநாள் வாடகை வெறும் 75 ஆயிரம் ரூபாய் மட்டுமே. இந்த வீட்டில் எட்டு பேர் தாராளமாக தங்கலாம். அதற்கேற்ற அனைத்து வசதிகளும் இங்கே இருக்கின்றன. ஒரு மினி திரையரங்கு கூட இந்த வீட்டில் இருக்கிறது.
அதுமட்டுமல்ல கொச்சியை ஒரு நாள் சுற்றிப்பார்க்கும் வகையில் ஒரு மினி டூர் பேக்கேஜும் இந்தத் தொகையில் வழங்கப்படுகிறதாம். மம்முட்டியின் வசதியான ரசிகர்கள் பலரும் தற்போது இந்த வீட்டில் தங்குவதற்காக போட்டி போட்டு புக் செய்து வருகிறார்களாம். இந்த வீட்டில் தங்கும்போது எப்படியாவது ஒரு நாள் மம்முட்டியை பார்த்து விட மாட்டோமா என்கிற எண்ணத்தில் தான் இந்த வீட்டை புக் செய்ய படை எடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.