குட் பேட் அக்லி : ஓஜி சம்பவம் பாடல் வெளியானது | ஜனநாயகன் படம் குறித்து மமிதா பைஜூ கொடுத்த அப்டேட் | இயக்குனர் ஷங்கரின் மகன் அர்ஜித்தை ஹீரோவாக்கும் பிரபுதேவா | ஏஸ் படத்தின் உருகுது உருகுது... முதல் பாடல் வெளியானது | சிம்பொனி இசை: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற இளையராஜா | 'வாகா' நடிகை ரன்யா ராவ் வழக்கில் திடீர் திருப்பம் | 'லாக்டவுன்' படம் 'லாக்' ஆகி விட்டதா ? | திட்டமிட்டபடி படப்பிடிப்பை முடிக்கும் லோகேஷ் கனகராஜ் | மீண்டும் ஹீரோவான 'பன்னீர் புஷ்பங்கள் ' சுரேஷ் | நயன்தாரா படத்தை ஓடிடியில் வெளியிடுவது ஏன்? : இயக்குனர் விளக்கம் |
மலையாளத்தில் டிவி தொடர்கள் மற்றும் சினிமாவில் நடித்து வருபவர்கள் பிஜு சோபானம் மற்றும் ஸ்ரீகுமார். இவர்கள் இருவரும் தற்போது ஒரு மலையாள டிவி தொடரில் இணைந்து நடித்து வருகின்றனர். இந்த தொடரின் படப்பிடிப்பின்போது இவர்கள் இருவரும் ஒரு நடிகையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அந்த நடிகை கொச்சி இன்போ பார்க் போலீசில் புகார் செய்தார். போலீசார் பிஜு சோபனம் மற்றும் ஸ்ரீகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோன்று கன்னட தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'முத்துலட்சுமி' என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் சாரித் பாலப்பா. இவர் மீது கன்னட தொலைக்காட்சி நடிகை ஒருவர் பெங்களூரு ஆர்.ஆர்.நகர் போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சாரித் பாலப்பா என்னை காதலிப்பதாகக் கூறி அவரது ஆசைக்கு இணங்கும்படி என்னை வற்புறுத்தினார். ஆனால் நான் மறுக்கவே, என்னை தொடர்ந்து தொந்தரவு செய்தார். கூட்டாளிகளுடன் ஒருமுறை என் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து என்னை துன்புறுத்தினார். பணம் தராவிட்டால் எனது அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டினார். அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார்.
இந்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சாரித் பாலப்பாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.