ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
கன்னட சினிமாவில் இயக்குரும், நடிகருமாக இருந்தவர் குரு பிரசாத். 2006ம் ஆண்டு 'மாதா' என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். அதன்பின்னர் எட்டேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல், எரடனே சாலா, ரங்கநாயகா உள்பட பல படங்களை இயக்கினார். சில படங்களில் நடித்துள்ளார்.
பெங்களூரு மதநாயக்கனஹள்ளி அப்பார்ட்மென்ட்டில் வசித்துவந்த நிலையில், மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 52 வயதான குரு பிரசாத் சமீபத்தில்தான் 2வது திருமணம் செய்தார். குருபிரசாத் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது அவரது பல படங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்பது குருபிரசாத்தின் இயக்கத்தில் வெளியான கடைசி படமான 'ரங்கநாயகா' படம் தோல்வியைச் சந்தித்தது ஆகியவைதான் தற்கொலைக்கு காரணம் என்று போலீஸ் விசாரணையில் தெரிவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் அவரது இரண்டாவது மனைவியிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.