சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் திலீப். இவருக்கும் நடிகை மஞ்சுவாரியருக்கும் பல வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்று மீனாட்சி என்கிற ஒரு மகள் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திலீப், மஞ்சு வாரியர் தம்பதி கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு திலீப், தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த நடிகை காவ்யா மாதவனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மகாலட்சுமி என்கிற மகளும் பிறந்தார்.
அதேசமயம் மஞ்சு வாரியர் விவாகரத்து பெற்று பிரிந்தாலும் அவரது மகளான மீனாட்சி தாயுடன் செல்லாமல் அப்போது இருந்து இப்போது வரை தன்னுடைய தந்தை திலீப்புடனேயே வசித்து வருகிறார். அது மட்டுமல்ல தனது சிற்றன்னை காவ்யா மாதவனுடன் தாயை விட மிக அதிக அன்பும் நெருக்கமும் காட்டி பழகி வருகிறார். பெற்றோரைப்போல மீனாட்சியும் சினிமாவுக்கு நடிக்க வருவாரா என்பது போன்று கடந்த சில வருடங்களாகவே கேட்கப்பட்டு வந்த நிலையில் அவர் சத்தம் இல்லாமல் டாக்டர் படிப்பை முடித்துள்ளார். படிப்பு முடித்து பட்டம் பெற்ற மீனாட்சி தனது தந்தை திலீப் மற்றும் சிற்றன்னை காவியா மாதவனுடன் இந்த மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
தனது மகள் டாக்டர் ஆனது குறித்து திலீப் கூறும்போது, “நீண்ட நாள் கனவு நனவான தருணம் இது. கடவுளுக்கு நன்றி. மகளுக்கு அன்பும் மரியாதையும்” என்று கூறியுள்ளார். திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் இது குறித்து கூறும்போது, “உன்னுடைய அர்ப்பணிப்புக்கும் கடின உழைப்புக்கும் உனக்கு இது கிடைத்திருக்கிறது. உன்னை நினைத்து நாங்கள் இன்று பெருமைப்படுவதுடன் இன்னும் இதைவிட அதிக உயரங்களுக்கு செல்லும் தகுதி உனக்கு இருக்கிறது என்பதும் எங்களுக்கு தெரியும்” என்று எனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.