கடன் பிரச்னை இருந்தாலும் நிம்மதியாக தூங்குகிறேன்: சேரன் பேச்சு | 100 முறை ஆர்ஆர்ஆர் பார்த்தேன் : ராம்சரணின் வீட்டிற்கே வந்து நெகிழ்ந்த ஜப்பான் ரசிகை | நடிகை ஹேமா மீதான போதைப்பொருள் வழக்கு ரத்து | படம் ரிலீஸ் : சிறையில் இருந்தபடி ரசிகர்களுக்கு நடிகர் தர்ஷன் கோரிக்கை | உள்ளாட்சித் தேர்தலில் ஓட்டளிக்க முடியாத மம்முட்டி | மலையாள திரைப்பட விழா நடுவர் மீது பாலியல் புகார் | மகன் மற்றும் நிவின்பாலியுடன் தனி விமானத்தில் பயணித்த மோகன்லால் | உயர் நீதிமன்றத்திலும் நடந்ததை சொல்வேன் : நடிகை வழக்கு குறித்து நடிகர் லால் திட்டவட்டம் | பிளாஷ்பேக்: வில்லனையும், நாயகியையும் முன்னிறுத்திய எம்ஜிஆர் | பிளாஷ்பேக்: முத்தான மூன்று சுப்புலக்ஷ்மிகளை வெள்ளித்திரைக்குத் தந்த இயக்குநர் கே சுப்ரமணியம் |

'அனே பாடகி' படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா. 'ரதாவரா' படத்தின் மூலம் புகழ்பெற்றார். இதை தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார். கிஷோர் நடித்த 'ரெட் காலர்' எனும் படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது அவர் இயக்கும் படம் செளகிதார். இதில் 'தியா' படத்தின் மூலம் புகழ்பெற்ற பிருத்வி அம்பர் 'சௌகிதார்' வேடத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தமிழில் தயாராகும் இந்த படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் சந்திரசேகர் பாண்டியப்பா கூறும்போது, “தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். எல்லா மொழி மக்களுக்கும் பொருந்துகிற கதை அம்சத்துடன் உருவாகிறது” என்றார்.
இந்த படத்தை வித்யா சேகர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் தயாரிக்கிறார். சச்சின் பஸ்ரூர் இசையமைக்கிறார்.