ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் | நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜரான மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர் |
'அனே பாடகி' படத்தின் மூலம் கன்னட சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சந்திரசேகர் பாண்டியப்பா. 'ரதாவரா' படத்தின் மூலம் புகழ்பெற்றார். இதை தொடர்ந்து அவர் பாலிவுட்டிலும் அறிமுகமானார். கிஷோர் நடித்த 'ரெட் காலர்' எனும் படத்தையும் இயக்கியுள்ளார். தற்போது அவர் இயக்கும் படம் செளகிதார். இதில் 'தியா' படத்தின் மூலம் புகழ்பெற்ற பிருத்வி அம்பர் 'சௌகிதார்' வேடத்தில் நடிக்கிறார். கன்னடம் மற்றும் தமிழில் தயாராகும் இந்த படம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது.
படம் குறித்து இயக்குனர் சந்திரசேகர் பாண்டியப்பா கூறும்போது, “தலைப்பை வைத்து இந்த திரைப்படம் மாஸான படம் என நினைத்து விடாதீர்கள். உண்மையில் இது ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். எல்லா மொழி மக்களுக்கும் பொருந்துகிற கதை அம்சத்துடன் உருவாகிறது” என்றார்.
இந்த படத்தை வித்யா சேகர் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கல்லஹள்ளி சந்திரசேகர் தயாரிக்கிறார். சச்சின் பஸ்ரூர் இசையமைக்கிறார்.