'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! | தேவி ஸ்ரீ பிரசாதிற்கு ஜோடியாகும் நடிகை யார் தெரியுமா? |
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக நடித்து வருபவர் தர்ஷன். கடந்த பல வருடங்களில் பல்வேறு விதமான சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வந்த தர்ஷன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னட படங்களில் நடிக்கவும் தடை விதிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது தனது ரசிகரான ரேணுகா சுவாமி என்பவரை கொலை செய்த வழக்கில் தர்ஷன் மற்றும் அவரது காதலி பவித்ரா கவுடா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனது காதலி பவித்ரா கவுடா குறித்து அவதூறான கமெண்ட்களை ரேணுகா சுவாமி தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகவும், அவரது மொபைல் நம்பருக்கு அநாகரீகமான ஆபாசமான செய்திகளை அனுப்பி டார்ச்சர் செய்ததாகவும் கேள்விப்பட்ட தர்ஷன் அவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.
இவருக்கு உதவியாக கிட்டத்தட்ட 10 பேர் இந்த கொலை வழக்கில் ஈடுபட்டுள்ளனர். அதில் ரேணுகா சுவாமியை காரில் கடத்தி வந்ததில் உதவியாக இருந்த அனு குமார் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். தனது மகன் இப்படி ஒரு கொலை குற்றத்தில் உடந்தையாக இருந்துள்ளான் என்கிற செய்தியும் அதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தியும் கேள்விப்பட்ட அனு குமாரின் தந்தை அந்த அதிர்ச்சியால் ஏற்பட்ட ஹார்ட் அட்டாக்கில் மரணம் அடைந்துள்ளார். இது ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த அனு குமாரின் குடும்பத்தில் மீண்டும் ஒரு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.