நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து கடந்த 2014ல் தெலுங்கானா மாநிலம் தனியாக பிரிந்து இன்றுடன் (ஜூன் 2) 10 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் தெலுங்கானா மாநிலத்துக்கான ஒரு பாடலை உருவாக்கும் பொறுப்பை ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணியிடம் ஒப்படைத்தார் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி. ‛ஜெய ஜெய ஹே தெலுங்கானா' என்று துவங்கும் இந்த பாடலை ஆண்டே ஸ்ரீ என்பவர் எழுதியுள்ளார். அதே சமயம் இந்த பாடலுக்கு இசையமைக்க கீரவாணியை ஒப்பந்தம் செய்தது குறித்து தெலுங்கானா சினிமா இசையமைப்பாளர்கள் சங்கம் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த சங்கத்தின் தலைவர் பெல்லப்பள்ளி மோகன் கூறும்போது, “தெலுங்கானா ஆந்தம் என்பது நம்முடைய உரிமை. பல போராட்டங்கள், சண்டைகளுக்கு இடையே இந்த மாநிலத்தை நாம் பெற்றோம். இந்த பயணத்தை நாம் கண்கூடாக பார்த்து வந்திருக்கிறோம். தெலுங்கானாவை சேர்ந்தவர் அல்லாத இசையமைப்பாளரான கீரவாணி இந்த விஷயங்களை புரிந்து கொண்டு இசையமைப்பார் என்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார். இசையமைப்பாளர் எம்.எம் கீரவாணி ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் இருக்கும் கோவூர் என்கிற கிராமத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தெரிகிறது.