மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

மலையாளத்தில் கடந்த வருட இறுதியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக வெளியானது 'நேர்'. காரணம் ஏற்கனவே தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் இந்த படம் உருவாகி இருந்தது தான். அதுமட்டுமல்ல கிட்டத்தட்ட படத்தின் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான காட்சிகள் ஒரு நீதிமன்ற அறைக்குள்ளேயே நடக்கும் விதமாக இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நீதி கேட்டு சாதுரியமாக வழக்காடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் மோகன்லாலும் அவருக்கு எதிராக வழக்காடும் வழக்கறிஞராக பிரியாமணியும் நடித்திருந்தனர். ஆரம்பம் முதல் இறுதி வரை விறுவிறுப்பு குறையாமல் இந்த படத்தை இயக்கியிருந்தார் ஜீத்து ஜோசப். இந்த படம் வெளியான நாளிலிருந்து மிகச் சீரான வேகத்தில் வசூலை ஈட்டி வந்த நிலையில் படம் வெளியாகி, தற்போது 25 ஆவது நாளில் நூறு கோடி வசூல் கிளப்பில் வெற்றிகரமாக இணைந்துள்ள