'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
மலையாள திரையுலகில் கடந்த 40 வருடங்களாக குணச்சித்திர நடிகராக நடித்து வந்தவர் நடிகர் மாமுகோயா. யதார்த்தமான நடிப்பிற்கு பெயர் போன இவர் காமெடியிலும் தனது முத்திரையை பதித்தார். கோழிக்கோட்டை சேர்ந்த இவர் கடந்த வருடம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். சமீபத்தில் கோழிக்கோட்டுக்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்ற மோகன்லால் அங்கே இருக்கும் மாமுகோயாவின் வீட்டிற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார். மோகன்லாலுடன் அவரது ஆஸ்தான இயக்குனர்களில் ஒருவரான சத்யன் அந்திக்காடுவும் உடன் சென்றிருந்தார்.
மோகன்லாலும், மாமுகோயாவும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் இருவரின் காமெடியும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ஒன்று. மாமுகோயா இறந்த சமயத்தில் மோகன்லால் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்ததால் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வர முடியவில்லை. தற்போது கோழிக்கோடு நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தானாகவே மாமுகோயாவின் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தினரை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளார் மோகன்லால்.