மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! | 25 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படத்தில் லோகேஷ் கனகராஜின் சம்பளம் 35 கோடியா? | அறக்கட்டளை மூலம் 75 பேரை படிக்க வைத்த பிளாக் பாண்டி! | ரஜினிக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த வாத்தியாரின் மறைவு |

மலையாள திரையுலகில் கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி கதாநாயகனாக நடித்து வரும் மோகன்லால், தனது நீண்டநாள் கனவான டைரக்சன் ஆசையையும் நிறைவேற்றும் விதமாக தற்போது பரோஸ் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. வரலாற்று பின்னணியில் 3-டி யில் உருவாகியுள்ள இந்த படத்தில் போர்ச்சுக்கீசியரான வாஸ்கோடகாமா நம் நாட்டில் நுழைந்து வாணிபம் செய்தபோது சேர்த்து வைத்த சொத்துக்களை பாதுகாக்கும் பரோஸ் என்கிற பாதுகவாலன் கதாபாத்திரத்திலும் மோகன்லால் நடித்திருக்கிறார். சந்தோஷ் சிவன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தியாவின் முதல் 3டி படமாக உருவான மை டியர் குட்டிச்சாத்தான் என்கிற திரைப்படத்திற்கு கதை எழுதிய ஜிஜோ புன்னூஸ் என்பவர் தான் இந்தப்படத்தின் கதையையும் எழுதியுள்ளார். படப்பிடிப்பு கடந்த வருடமே முடிவடைந்து விட்டாலும் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஒவ்வொன்றும் கவனமுடன் மேற்கொள்ளப்பட்டு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வ போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த நேர் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக அவர் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் வரும் ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிறது. இந்த படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் மோகன்லால் முதன்முறையாக தானே இயக்கி இருக்கும் பரோஸ் திரைப்படமும் விரைவில் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு உற்சாகத்தில் இருக்கின்றனர்.