‛வட சென்னை' பின்னணியில் வெற்றிமாறன் - சிம்பு படம்: அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் தாணு | அக்டோபர் முதல் வாரத்தில் நெட்பிளிக்ஸில் வெளியாகும் ‛வார்-2' | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் டிக்கெட் முன்பதிவு எத்தனை கோடி? | பைனான்ஸ் பிரச்னை காரணமாக ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தமா? | தனுஷின் ‛இட்லி கடை' படத்தை வெளியிடும் இன்பன் உதயநிதி! | உங்களை விட்டால் யார் இருக்கா ? அனுஷ்காவிடம் ராணா கலாட்டா | பிஜூமேனன் நடிப்பதாக இருந்த ‛கீர்த்தி சக்ரா' ; மோகன்லாலுக்கு கை மாறியது ஏன் ? இயக்குனர் மேஜர் ரவி புதிய தகவல் | நிவின்பாலியின் படங்களை பாராட்டிய பவன் கல்யாண் | ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியாகும் ‛உப் யே சியாபா' | யார் இடத்தையும் யாரும் பிடிக்கவில்லை: சிவகார்த்திகேயன் |
மலையாளத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மம்முட்டி ஜோதிகா இருவரும் இணைந்து நடித்த 'காதல் ; தி கோர்' என்கிற படம் வெளியானது. குடும்ப கதை அம்சத்துடன் வெளியான இந்த படத்திற்கு விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பு மற்றும் பாராட்டுக்கள் கிடைத்தன. குறிப்பாக மம்முட்டியின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோழிக்கோடில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிர்வாகம் “இன்றைய நாட்களில் மலையாள சினிமாவில் இருக்கும் மறைமுக அரசியல்” என்கிற தலைப்பில் ஒரு விவாதத்தை துவங்கி நடத்த சிறப்பு விருந்தினராக இந்த படத்தின் இயக்குனர் ஜியோ பேபியை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தது.
அவரும் அந்த அழைப்பை ஏற்று கோழிக்கோடு வந்த நிலையில் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக அவரிடம் சொல்லப்பட்டது. அதற்கு காரணம் ஜியோ பேபி பொதுவெளியில் கூறும் கருத்துக்கள் சமூக அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை என மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதால் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என மாணவர்கள் அமைப்பு மூலமாக அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து இயக்குனர் ஜியோ பேபி கூறும்போது, “என் கருத்துக்கள் காரணமாக இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது என்று சொல்வதை நான் அவமானமாக உணர்கிறேன். இது குறித்து விவரம் அறிய கல்லூரி முதல்வரை தொடர்பு கொண்டால் இப்போது வரை அவர் போனை எடுக்கவில்லை. நாளை இதுபோன்று வேறு ஒரு இயக்குனருக்கு நடக்க கூடது என்பதால் இது குறித்து கல்லூரி நிர்வாகம் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடர இருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இந்த படத்தில் இயக்குனர் ஜியோ பேபி ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்க்கை பற்றி சொல்லியிருந்தது தான் இந்த அளவிற்கு சர்ச்சை வெடிக்க காரணம் என்று சொல்லப்படுகிறது.