சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
மலையாள திரையுலகில் மோகன்லால், மம்முட்டிக்கு அடுத்ததாக முன்னணி நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மோகன்லால் நடித்த லூசிபர் என்கிற படத்தின் மூலம் வெற்றிகரமான இயக்குனராகவும் மாறினார். அதைத்தொடர்ந்து மோகன்லாலை வைத்தே ப்ரோ டாடி என்கிற காமெடி படத்தையும் இயக்கி, அதிலும் வெற்றி பெற்றார். லூசிபர் படம் வெளியான கொஞ்ச நாட்களிலேயே அந்த படத்தின் இரண்டாம் பாகமாக எம்புரான் என்கிற படத்தை இயக்க உள்ளதாக அறிவித்திருந்தார் பிரித்விராஜ்.
சில தினங்களுக்கு முன்பு இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி படத்திற்கான பூஜையுடன் போடப்பட்டது. இந்த நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. துவக்க நாளில் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற பூஜை குறித்த சில புகைப்படங்களை நடிகர் மோகன்லால் பகிர்ந்து கொண்டு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இந்த படத்தை லைக்கா நிறுவனம், மோகன்லாலின் ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் இடம்பெறும் நட்சத்திரங்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.