பாலகிருஷ்ணாவின் மகனுக்கு அம்மாவாக ஷோபனா? | சூர்யா 44வது படம் கேங்க்ஸ்டர் படம் இல்லை - கார்த்திக் சுப்புராஜ் | திருமணத்திற்கு தயாரான ரம்யா பாண்டியன் : யோகா மாஸ்டரை கரம் பிடிக்கிறார் | தள்ளி வைக்கப்பட்ட இந்தியன் 3 ரிலீஸ் | சிவாவை தொடர்ந்து பிரசாந்த் நீலுடன் இணையும் அஜித் | கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா டீசர் வெளியானது | கர்ப்பமாக இருக்கும் 'கபாலி' கதாநாயகி ராதிகா ஆப்தே | பிளாஷ்பேக் : வில்லனுக்கு மரியாதை தந்த ரஜினி | பிச்சைக்காரனாக நடிக்க நிஜமாகவே பிச்சை எடுத்த கவின் | மோசடி நிறுவனத்துடன் தொடர்பா? - தமன்னாவிடம் அமலாக்கத்துறை திடீர் விசாரணை |
அஜித் நடித்த 'வீரம்' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர் ஷியாஸ் கரீம். தற்போது மலையாள படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். மலையாள 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இதோடு எர்ணாகுளத்தில் உடற்பயிற்சி மையமும் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் காசர்கோடு மாவட்டம் பெருன்னா பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஷியாஸ் கரீம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்ததாகவும், 11 லட்சம் ரூபாயை பறித்ததாகவும் காசர்கோடு மாவட்டம் சந்தேரா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் ஷியாஸ் கரீம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையே ஷியாஸ் கரீம் துபாய்க்கு தப்பிச் சென்றார்.
அதைத்தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்தநிலையில் நடிகர் ஷியாஸ் கரீம் நேற்று துபாயில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். இந்த தகவல் அறிந்ததும் சுங்கத் துறையினர் அவரைப் பிடித்து சந்தேரா போலீசுக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து சந்தேரா போலீசார் சென்னை வந்து அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.