பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் | நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது |

சமீபத்திய படங்களில் பெரிய அளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. அப்படி சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான பேபி என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படத்தில் போதைப் பொருள் பயன்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதுபோன்ற காட்சிகள் இளைஞர் சமுதாயத்தை தவறாக வழி நடத்தும் என்று கூறியுள்ள ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அசோக், தற்போது பேபி படக்குழுவினருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
மேலும் ஆந்திராவில் போதை பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் பெங்களூரில் இருந்து தான் புழக்கத்தில் விடப்படுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் இதுபோன்ற படங்கள் போதைப் பொருட்கள் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இனிவரும் நாட்களில் இதுபோன்ற போதைப்பொருள் காட்சிகளை எடுக்கும் படங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.