'திரு.மாணிக்கம்' திரைக்கதை புத்தகமாக வெளியீடு | தெலுங்கானா டிக்கெட் கட்டண உயர்வு : தடையை நீக்கிய உச்சநீதிமன்றம் | 3 படங்கள் 1000 கோடி முதலீடு, மீண்டு வருமா தயாரிப்பு நிறுவனம் ? | முதல்வர் ஸ்டாலினின் வாழ்க்கை படமாகிறது: சமுத்திரக்கனி இயக்குகிறார்? | ரஜினியுடன் நடிக்கும்போது இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டி இருந்தது ; நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு | விஜய்சேதுபதி குறித்து சிலாகிக்கும் பாலிவுட் நடிகர் மிலிந்த் சோமன் | பிளாஷ்பேக்: “அரசகட்டளை” என பெயர் மாற்றமான எம் ஜி ஆரின் “பவானி” | இதயக்கனி, முத்து, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் | எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம் | நான் தயாரித்த படங்களால் நஷ்டம் : முதல் முறையாக மனம் திறந்த விஜய்சேதுபதி |

சமீபத்திய படங்களில் பெரிய அளவில் போதைப் பொருட்கள் பயன்படுத்தும் காட்சிகள் இடம் பெற்று வருகின்றன. அப்படி சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாரின் தம்பி ஆனந்த் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வெளியான பேபி என்கிற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ஆனால் இந்தப் படத்தில் போதைப் பொருள் பயன்படுத்தும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தன. இதுபோன்ற காட்சிகள் இளைஞர் சமுதாயத்தை தவறாக வழி நடத்தும் என்று கூறியுள்ள ஐதராபாத் போலீஸ் கமிஷனர் அசோக், தற்போது பேபி படக்குழுவினருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளார்.
மேலும் ஆந்திராவில் போதை பொருட்கள் பயன்பாடு அதிக அளவில் பெங்களூரில் இருந்து தான் புழக்கத்தில் விடப்படுகின்றன என்பதை கண்டறிந்து அவற்றை தடுக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில் இதுபோன்ற படங்கள் போதைப் பொருட்கள் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் இனிவரும் நாட்களில் இதுபோன்ற போதைப்பொருள் காட்சிகளை எடுக்கும் படங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.




