நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கடந்த 2019ல் மம்முட்டி நடிப்பில் தெலுங்கில் யாத்ரா என்கிற படம் வெளியானது. மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்து இருந்தார். ராஜசேகர ரெட்டி முதல்வராக அரியணை ஏறுவதற்கு முன்பு அவர் செய்த சூறாவளி நடைப்பயணம் அவரது அரசியல் வாழ்க்கையை எப்படி திசைதிருப்பியது என்பதைத்தான் இந்தப் படத்தில் மையக்கருவாக அமைத்து படமாக்கி இருந்தார் இயக்குனர் மகி ராகவ்.
அதை தொடர்ந்து அந்த வருடமே நடைபெற்ற ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று முதல்வராக பொறுப்பேற்றார். அந்த வகையில் அவரது வெற்றியில் யாத்ரா படத்திற்கும் ஒரு மிகப்பெரிய பங்கு இருந்தது. இந்த நிலையில் தற்போது யாத்ரா படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் முதல் பாகத்தை இயக்கிய மகிராகவ். இந்த படம் முழுவதும் ஜெகன்மோகன் ரெட்டியை மையப்படுத்தி உருவாக எண்ணி உள்ளார். அவரது தந்தை கதாபாத்திரத்தில் யாத்ரா படத்தில் மம்முட்டி நடித்தது போல, ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் துல்கர் சல்மான் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை இயக்குனர் அணுகியுள்ளார்.
ஆனால் துல்கர் சல்மான் இந்த படத்தில் சில காரணங்களை கூறி நடிக்க மறுத்துவிட்டார். குறிப்பாக தெலுங்கில் தற்போது துல்கர் சல்மானுக்கு ரசிகர் வட்டம் பெருகி வருகிறது, அனைத்து தரப்பிலும் அவரது ரசிகர்கள் இருப்பதால் அரசியல் சார்ந்த படத்தில் நடித்து தேவையில்லாத சங்கடங்களை சந்திக்க வேண்டாம் என்பதாலேயே இந்த வாய்ப்பை அவர் மறுத்து விட்டார் என சொல்லப்படுகிறது.