நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
கடந்த சில மாதங்களுக்கு முன் மம்முட்டி நடித்த ஆக்ஷன் படமான கிறிஸ்டோபர் மற்றும் ஆர்ட் படமான நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி.
ஆதிபுருஷ் படத்தில் அங்கதன் கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் மனோகர் பாண்டே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தற்போது இந்தப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதை பிடித்துப்போனதால் மம்முட்டியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இதை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.