பிளாஷ்பேக்: அறச்சொல் பாடி, தோல்வியை சந்தித்த எம் ஜி ஆரின் “தலைவன்” | தமிழில் மிகவும் சுமாரான முன்பதிவில் 'குபேரா' | 'குட் வொய்ப்' வெப் தொடரில் வலுவான நாயகி கதாபாத்திரம்: இயக்குனர் ரேவதி | பிளாஷ்பேக்: தமிழில் வந்த முதல் உளவியல் திரைப்படம் | சிவகார்த்திகேயன் 24வது படம் : இயக்குனர் யார்? | பிக்பாக்கெட் குற்றங்களை விரிவாக பேசும் படம் | தமிழில் வெளியாகும் ஹாலிவுட் அனிமேஷன் படம் | திருமண ஆசை காட்டி மோசடி : சின்னத்திரை நடிகை ரிகானா மீது போலீசில் புகார் | ஐடி., ரெய்டு நடக்கும் உணவகம் என்னுடையது அல்ல : ஆர்யா பேட்டி | சிரஞ்சீவி 157வது படப்பிடிப்பில் இணைந்த நயன்தாரா |
கடந்த சில மாதங்களுக்கு முன் மம்முட்டி நடித்த ஆக்ஷன் படமான கிறிஸ்டோபர் மற்றும் ஆர்ட் படமான நண்பகல் நேரத்து மயக்கம் ஆகிய படங்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் தற்போது மீண்டும் அதிரடி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மம்முட்டி.
ஆதிபுருஷ் படத்தில் அங்கதன் கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் மனோகர் பாண்டே இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மலையாள சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளரான ரோபி வர்கீஸ் ராஜ் என்பவர் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். தற்போது இந்தப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கதை பிடித்துப்போனதால் மம்முட்டியே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் இதை தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.