2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கு நடிகர் கோபிசந்த் தொடர்ந்து அதிரடியான குடும்ப படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. கடைசியாக ராமபாணம் என்ற படத்தில் நடித்தார். இந்த நிலையில் கோபிசந்த் தனது 31வது படம் குறித்து அறிவித்துள்ளார். பிரபல கன்னட இயக்குனர் ஷர்சா இயக்கத்தில் கோபிசந்த் நடிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு பீமா என்று தலைப்பு வைத்துள்ளனர். இதனை பர்ஸ்ட் லுக் உடன் அறிவித்துள்ளனர். ஸ்ரீ சத்யா சாய் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கே.ஜி.எப் பட இசையமைப்பாளர் ரவி பசூர் இசையமைக்கிறார். இதுவும் கோபிசந்த்தின் வழக்கமான ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகிறது. போலீஸ் வேடத்தில் அவர் நடிக்கிறார்.