கேன்ஸ் திரைப்பட விழாவில் 'மாண்புமிகு பறை' | கேரளாவில் தாய்மாமன் கலாசார உறவு இல்லை: ஸ்வாசிகாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு | என்னை பற்றி தவறாக பேசுகிறவர்களை கடவுள் பார்த்துக் கொள்வார் : யோகிபாபு | பாகிஸ்தான் சார்ந்த ஓடிடி 'கன்டென்ட்' - தடை விதித்த மத்திய அரசு | சிம்ரனை தொடர்ந்து இலங்கை தமிழ் பேசும் தேவயானி | தக் லைப் அப்பா, மகன் மோதல் கதையா? | ஹீரோ ஆனார் கேபிஒய் பாலா | தியேட்டர், ஓடிடி… அடுத்து டிவியிலும் வரவேற்பைப் பெறாத 'கேம் சேஞ்ஜர்' | பிளாஷ்பேக்: சவாலுக்கு படம் எடுத்த பாலுமகேந்திரா | பிளாஷ்பேக்: குழந்தை நட்சத்திரமாக நடித்த பத்மா சுப்பிரமணியம் |
தெலுங்குத் திரையுலகத்தின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ். அவரும் தெலுங்கில் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கும், நடிகை லாவண்யா திரிபாதிக்கும் இடையில் காதல் என கடந்த சில வாரங்களாகவே செய்திகள் வந்து கொண்டிருந்தன. இருவரது வீட்டாரும் திருமணம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி முடித்ததாகவும் சொன்னார்கள்.
இந்நிலையில் நேற்று இரவு தனது சமூக வலைத்தளத்தில் லாவண்யாவுடன் இருக்கும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து 'எனது காதலைக் கண்டுபிடித்தேன்' என வருண் தேஜ் பதிவிட்டுள்ளார். நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள வருண் வீட்டில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதற்குப் பிறகே இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் வருண்.
அப்பதிவை மறுபதிவு செய்து, “2016 முதல் என்றென்றைக்கும், எனக்கானவரைக் கண்டுபிடித்தேன்,” என லாவண்யா குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய திருமண நிச்சய நிகழ்வில் வருணின் பெரியப்பாவும், நடிகருமான சிரஞ்சீவியின் குடும்பத்தினரும், சித்தப்பாவும் நடிகருமான பவன் கல்யாண், சகோதரர் ராம் சரண் உள்ளிட்டோரும், அல்லு அர்ஜுன் குடும்பத்தினரும், லாவண்யா திரிபாதி குடும்பத்தினர் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களும் கலந்து கொண்டுள்ளனர்.